News September 11, 2025
தி.மலை: மான் வேட்டையாடிய நபர் கைது

தண்டராம்பட்டு அடுத்த சொர்ப்பனந்தல் பகுதியில் மான் வேட்டை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சாத்தனூர் அணை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழு ரோந்து சென்றது. அப்போது, வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான பெருமாள் என்பவர் மான் வேட்டையாடியது தெரியவந்தது. அவரிடமிருந்து மான் இறைச்சி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வனத்துறையினர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News September 11, 2025
தி.மலை: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

தி.மலை மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 11, 2025
5 டன் விதைகள் விற்பனை செய்ய தடை

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள போளூர், கலசபாக்கம், கீழ்பென்நாத்தூர் ஆகிய வட்டரங்களில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா நேற்று ( செப்டம்பர் 10) ஆய்வு மேற்கொண்டார். அப்போது வைக்கப்பட்டிருந்த விதை குவியல்களில் 20 விதை மாதிரிகளில் முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மை அற்ற ஐந்து டன் விதைகள் கண்டறியப்பட்டு அதற்கு தடை விதிக்கப்பட்டது.
News September 11, 2025
தி.மலை: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

தி.மலை மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <