News December 9, 2025

தி.மலை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 10, 2025

தி.மலை: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News December 10, 2025

திருவண்ணாமலையில் கூண்டோடு கைது!

image

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 134 கூண்டோடு கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 10, 2025

தி.மலை: 6 வயது சிறுமியின் மனசு ரொம்ப பெருசு♥️

image

தி.மலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடிநாள் தினத்தை முன்னிட்டு ராந்தம் கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ- தமிழரசி தம்பதியரின் மகள் 6 வயதான இன்பானசியா, தான் போட்டிகளில் பங்கேற்று பெற்ற பரிசுத்தொகை ரூ.1500 கொடி நாள் நிதியாக வட்டாட்சியர் செந்தில்குமாரிடம் வழங்கினார். இந்த தொகை தேசத்தின் முப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும். வயது சிறிதானாலும் மனசு பெருசுல. SHARE

error: Content is protected !!