News February 23, 2026
தி.மலை: மகள் கண்முன்னே பெற்றோர்கள் பலி

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர் அப்பாண்டைராஜன் (49). இவரது மனைவி ஜீவிதா (41) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். மகள் திவ்யஸ்ரீ (16) +2 படித்து வருகிறார். இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் 3 பெரும் பைக்கில் வந்தபோது எதிரே வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் மகள் கண்முன்னே பெற்றோர்கள் உயிரிழந்தனர்.
Similar News
News March 1, 2026
தி.மலை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 1, 2026
திமுக கோட்டையா தி.மலை?

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. அதேபோல் 2024 MP தேர்தலிலும், தி.மலையில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 2.33 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றார். இது இந்த மாவட்டத்தின் மீது திமுக கொண்டுள்ள பிடியைக் காட்டுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில் TVK, PMK திமுக கோட்டையில் விரிசலை ஏற்படுத்துமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News March 1, 2026
ஆரணியில் அதிரடி கைது

ஆரணி அருகே ஆரணி–வேலூர் சாலையில் ஜெயலட்சுமி(45) என்பவரிடம் 7 சவரன் தங்க நகையை டூவீலரில் வந்த இருவர் பறித்து சென்றனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (26), மதன் குமார் (30) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


