News December 28, 2025
தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
Similar News
News January 30, 2026
தி.மலை: தமிழ் தெரிந்தால் போதும், வங்கியில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <
News January 30, 2026
தி.மலை: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

தி.மலை மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ibps.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.
News January 30, 2026
திருவண்ணாமலையில் நாளை பவர் கட்!

திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை(ஜன.31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை, தென்னரசம்பட்டு, வேங்கிக்கால், வள்ளிவாகை, ஊம்சாம்பாடி, கிளியாப்பட்டு, துர்க்கை நம்மியந்தல், சானானந்தல், வட ஆண்டாபட்டு, குண்ணியந்தல், வட அரசம்பட்டு, நொச்சிமலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். (SHARE IT)


