News January 19, 2026
தி.மலை: பட்டப்களில் செயின் பறிப்பு

கண்ணமங்கலம் அருகில் உள்ள முருகாபாடி கிராமத்தில் வசிப்பவர் கனகா(65). இவர் மதிய நேரத்தில் தனது நிலத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 25 வயது உடைய மர்ம நபர் கனகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை திடீரெனப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். அதிர்ச்சியில் கனகா திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிடும் பயனில்லை. புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Similar News
News March 26, 2026
தி.மலை: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News March 26, 2026
தி.மலை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 26, 2026
தி.மலை: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

தி.மலை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04175-232845, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE -1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.


