News December 31, 2025
தி.மலை: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்!

தி.மலை மக்களே! நம்மில் பலரும் சரியான வேலை அமையாமல் அல்லற்பட்டு வருகிறோம். இந்த நிலையில்தான், வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்திருந்தால் தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 45 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு தகுதிப்படைத்தவர்கள் ஆவர். இங்கு <
Similar News
News January 26, 2026
தி.மலையில் கரண்ட் கட் ?

தண்டராம்பட்டு துணை மின்நிலையத்தில் நாளை (ஜன.27) மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த பணி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டராம்பட்டு, கொளமஞ்சனூர். நாளாள்பள்ளம், அமந்தபுத்தூர், தென்முடியனூர், நெல்லிக்குப்பம், ராதாபுரம், கீழ்வணக்கம்பாடி, அகரம், தாழனோடை, அல்லப்பனூர், சாத்தனூர் மேலும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது.
News January 26, 2026
தி.மலை: கூலி தொழிலாளி கொடூர பலி!

ஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மாடுகளை மேய்த்து கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று (ஜன.25) மாடுகள் மேய்த்து கொண்டிருக்க போது ஒரு மாடு கன்னியப்பனை முட்டியது இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 26, 2026
ஆரணி: மாட்டு சண்டையை தடுக்க சென்றவர் பலி!

ஆரணி அருகே நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (62) இவர் ஆரணி அமிர்தராஜ் என்பவரின் மாட்டுப் பண்ணையில் மாடுகளை மேய்க்கும் போது, மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு மோதிக்கொண்டது. மாடுகளை கட்டுப்படுத்த சென்ற கன்னியப்பனை மாடுகள் முட்டி மோதியதில், கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


