News November 22, 2025

தி.மலை: தொடரும் அவலம்; அலைக்கழிக்கப்படும் மக்கள்!

image

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார், சாதிச் சான்று உள்ளிட்ட சேவைகளை பழங்குடியின மக்கள் பெறும் வகையில் SC/ST நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஆதார் பெற வந்த இருளர் மக்களிடம், ஆதார் எடுக்க பிறப்பு சான்றிதழ் தேவை என கூற, ஆதார் எடுக்கவில்லை. இதனால், தங்களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாமல் ஆதார் வழங்க கோரி, தர்ணாவில் ஈடுபட்டனர்.

Similar News

News November 28, 2025

தி.மலையில் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் வேலு

image

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு (நவ.28) திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய்த்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் கருணை அடிப்படையில் சமையலர், சமையல் உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், அலுவலக உதவியாளர், சாலை பணியாளர், உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

News November 28, 2025

புதிய செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர்

image

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு, திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக காவல் நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை Mobile App (நவ.28) இன்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது கலெக்டர் தர்ப்பகராஜ் உடனிருந்தார்.

News November 28, 2025

தி.மலை: AIRPORT-ல் வேலை! APPLY NOW

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 -ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!