News February 23, 2026
தி.மலை: தூக்கில் தொங்கிய லாரி டிரைவர்

வந்தவாசி சவேரியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த யேசு பாலு மகன் சின்ன முத்துவேல் (27). லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தார். இதனை குடும்பத்தினர் கண்டித்து வந்துள்ளனர். வழக்கம் போல் அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*
Similar News
News February 24, 2026
தி.மலை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் நாளைக்குள்(பிப்.25) தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார். பதிவேற்றம் செய்யப்படாத பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் இனி வரும் காலங்களில் பி.எம்.கிசான் 22-ஆவது தவணை நிதி உதவி பெற இயலாது. ஆகையால், விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
News February 24, 2026
தி.மலை: குழந்தைகளுக்கு ஆதார் முகாம்

அங்கன்வாடிகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம் இன்று(பிப்24) தொடங்கி வருகிற பிப்.28ஆம் தேதி வரை நடக்கிறது என திருவண்ணாமலை அஞ்சலங்களின் கோட்டக் கண்காணிப்பாளர் முருகன் தெரிவித்துள்ளார்.எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
News February 24, 2026
தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க!


