News December 1, 2025

தி.மலை: தலைகுப்புற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

image

கலசபாக்கம் வட்டம் தென் பள்ளிப்பட்டு அருகே சாலையில் வாகனத்தை முந்த முயன்ற ஆந்திரா காரின் மீது மோதாமல் இருக்க ஒதுங்கிய அரசு பேருந்து நிலை தடுமாறி சாலை ஓரம் கவிழ்ந்தது. பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்ததால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், பேருந்தை மீட்க வந்த கிரேனும் கவிழ்ந்ததால், கூடுதல் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேருந்தும் கிரேனும் மீட்கப்பட்டது.

Similar News

News December 1, 2025

தி.மலை: இட்லி சாப்பிட்ட சிறுமி திடீர் மரணம்!

image

வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு பிரனிதா (11) உள்ளிட்ட 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 23-ந்தேதி காலை வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், தாய், மகள்ககுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேலூரில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரனிதா(11) பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 30, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 30, 2025

கார்த்திகை மகாதீபம்: 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அறிவிப்பு

image

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு டிசம்பர் 2 முதல் 5 வரை பக்தர்கள் சிரமமின்றி பயணிக்க மாவட்ட காவல்துறை 24 தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகரின் பல்வேறு வழித்தடங்களில் இந்த நிலையங்கள் செயல்பட உள்ளது. பொதுமக்கள் மாற்று நிலையங்களை பயன்படுத்துமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!