News December 7, 2025
தி.மலை: தந்தை பெரியார் விருது பெற இவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம். வருகிற டிசம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
தி.மலை: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலி

நல்லவன்பாளையம் டேம் குழாய் தெருவைச் சேர்ந்தவர் காசியம்மாள் (70). இவர் கடந்த 9-ம் தேதி மாலையில் மாவு அரைக்கச் சென்றபோது, தி.மலை- தண்டராம்பட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காசியம்மாள், தி.மலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது கணவர் லட்சுமணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 11, 2025
தி.மலை: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலி

நல்லவன்பாளையம் டேம் குழாய் தெருவைச் சேர்ந்தவர் காசியம்மாள் (70). இவர் கடந்த 9-ம் தேதி மாலையில் மாவு அரைக்கச் சென்றபோது, தி.மலை- தண்டராம்பட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காசியம்மாள், தி.மலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது கணவர் லட்சுமணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 11, 2025
தி.மலை: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகேஸ்வரி (63), காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிலிருந்த பீரோவில் வைத்திருந்த 4 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1,80,000 எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


