News December 22, 2025
தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

தி.மலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இங்கு <
Similar News
News December 24, 2025
தி.மலை: போதை தலைகேறியதால் நேர்ந்த கொடூரம்!

வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் புறவழிச்சாலையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், ராகுல் (20) என்பவர் தனது நண்பர்களான தேவக்குமார் மற்றும் விஜய்யை பேனா கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் காயமடைந்த இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தேவக்குமார் அளித்த புகாரின் பேரில், பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 24, 2025
தி.மலை: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் மீது பாய்ந்த போக்சோ

கலசபாக்கம் அருகே முன்னூர்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (25), மாடு விடும் திருவிழாவிற்கு வந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடலாடி போலீசார் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த கலசபாக்கம் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 24, 2025
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் மேலே வழங்கப்பட்டுள்ளது.


