News January 10, 2026

தி.மலை: சம்பவ இடத்துலயே துடிதுடித்து பலி!

image

வந்தவாசி அருகே பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (54), நேற்று வந்தவாசி – திண்டிவனம் நெடுஞ்சாலையில் இளங்காடு கூட்ரோடு அருகே சாலையைக் கடந்தபோது, அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பொன்னூர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயக்குமாரின் மனைவி கலைமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

தி.மலை கோயிலின் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

image

பிரசித்திபெற்ற தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்ளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், ரூ.5 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரத்து 806-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 190 கிராம் தங்கம், 2 கிலோ 390 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

News January 30, 2026

தி.மலையில் குறைந்த விலையில் வாகனம்- DON’T MISS!

image

திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தின் TN 21 G0793 (Bolero Lx) அரசு வாகனம் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அரசு வழிகாட்டு மதிப்பு ரூ.1 லட்சம். 04.02.2026 காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏலம் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்க ரூ.5,000 முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

News January 30, 2026

தி.மலை: தூக்கில் தொங்கிய பெண்

image

சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார், பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோனிகா (27). கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மோனிகாவின் தம்பி மேகநாதன் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*.

error: Content is protected !!