News December 23, 2025
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (22.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 26, 2025
திருவண்ணாமலையில் தடை விதிப்பு!

தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின் தி.மலை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி 26.12.2025 -27.12.2025 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு மாவட்டம் முழுவதும் அமலில் இருக்கும். அனுமதி இல்லாமல் ட்ரோன் பறக்க விடுபவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
News December 26, 2025
வரலாற்று சாதனை படைத்த திருவண்ணமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் சேகரிக்கப்பட்ட உண்டியல் காணிக்கை ரூ. 6,04,48,154 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் லட்சக்கணக்கான பக்தர்களின் வருகை காரணமாக காணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக கோயில் நிர்வாகம் நேற்று (டிச.25) தெரிவித்துள்ளது.
News December 26, 2025
தி.மலை: மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு!

கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (70) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நபர், நெசல் கிராமம் அருகே அவரை இறக்கிவிடும்போது கழுத்திலிருந்த 6 கிராம் தங்கத் தாலியைப் பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.


