News September 14, 2025
தி.மலை: ஒரே நாளில் 1,302 வழக்குகளுக்கு தீா்வு

“திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மையத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று(செப்.13) நடைபெற்றது. இதை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான மதுசூதனன் தொடங்கிவைத்தார். பல்வேறு வழக்குகள், விபத்து காப்பீடு தொகை வழக்குகள் நடைபெற்று 1,302 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
Similar News
News September 14, 2025
தி.மலை: தவறான தகவலால் திரண்ட மக்கள்!

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுவதாக பரவிய தவறான தகவலால் திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி முன் மாற்றுத் திறனாளிகள்(செப்.13) திரண்டனா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அதிகாரிகள் முகாம் ஏற்பாடு செய்து நடத்தினா். அங்கு காத்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
News September 14, 2025
தி.மலை: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

திருவண்ணாமலை மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 14, 2025
தி.மலை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

தி.மலை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க