News January 25, 2026
தி.மலை: ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை, ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் நரேஷ் (18), நிலத்தில் இருந்த தாத்தாவிற்கு உணவு கொண்டு சென்றபோது, விருப்பாட்சிபுரம் ஏரியில் கால் கழுவ முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
கிரிவலம் முடிந்து தூய்மை பணிகள் தீவிரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கிரிவலப் பாதைகளில் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று (பிப்.02) ஆட்சியர் க.தர்ப்பகராஜ் கிரிவலப் பாதைகளை நேரில் பார்வையிட்டு, துப்புரவு பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
News February 2, 2026
ஆரணி: 10.5% இட ஒதுக்கீடு கேட்டு தற்கொலை!

தி.,மலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் பட்டதாரி வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கைப்பட கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 2, 2026
தி.மலை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

தி.மலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <


