News September 9, 2025
தி.மலை: உள்ளூரில் அரசு வேலை

தி.மலை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் ஓட்டுநர், எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆரணி, சேத்துப்பட்டு, செய்யார், ஜவ்வாதுமலை, போளூர், தெள்ளார், தி.மலை, வந்தவாசி, வெம்பாக்கம், மேற்கு ஆரணி உள்ளிட்ட ஊராட்சிகளில் தகுதியுடையோர் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 9, 2025
தி.மலை:குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வுக்கூட்டம்

உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் (ஓய்வு) தலைமையில் கலெக்டர் க.தர்ப்பகராஜ், முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிரிவலப்பாதையில் மலை மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News September 9, 2025
தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
கலெக்டருக்கு நினைவுப்பரிசு வழங்கிய எ.வ.வே.கம்பன்

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி இன்று (செப்.09) துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வை துவக்கி வைக்க வருகை புரிந்த தி.மலை கலெக்டர் தர்ப்பகராஜை தமிழ்நாடு மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.