News February 6, 2026

தி.மலை: உயிரை கையில் பிடித்து வாழும் மக்கள்

image

ஆரணி அடுத்த தச்சூர் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருளர் இன குடும்பத்திற்கு சமத்துவபுரம் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. அந்த வீடுகள் அனைத்தும் தரமற்ற முறையில் இருப்பதாகவும், தொட்டாலே பெயர்ந்து விழுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும், வீடு கட்ட ஒதுக்கிய நிதியை கொள்ளை அடித்தவர்கள் மீது நடக்கடிகை எடுக்க வேண்டும் எனவும் குமுறுகின்றனர்.

Similar News

News February 8, 2026

தி.மலை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

தி.மலை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள்(ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News February 8, 2026

பர்வதமலை ஏற கடும் கட்டுப்பாடு- அது என்னென்ன?

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள பருவதமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1) பக்தர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி. 2) 18 -60 வயதுடையோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 3) ஒரு நாளைக்கு தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 800 பேருக்கு அனுமதி. 4) வரும் முன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்.

News February 8, 2026

தி.மலை: மளமளவென காட்டுக்குள் பரவிய தீ!

image

ஆரணி அருகே வெட்டியாந்தொழவம் கிராம வனப்பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதால் காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்திற்கு காரணமான மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!