News November 11, 2025
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
தி.மலை: ஆற்றில் மூழ்கி பலியான பள்ளி மாணவன்!

ஆரணி கோட்டை வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ரவி-சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு சுனில்ராஜ் (11) என்ற ஒரு மகனும் உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் கமண்டல நதியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் ஆற்றில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நேற்று (நவ.10) உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 10, 2025
தி.மலை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன் ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு, பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
ஆரணி: நதியில் மூழ்கி சிறுவன் பலி!

தி.மலை: ஆரணி வட்டம், ஜெயலட்சுமி நகர் பின்புறம் உள்ள கமண்டல நாக நதி ஆற்றில் நேற்று மாலை குளிக்க 3 நபர்கள் சென்றபோது ஒரு சிறுவன் தவறி ஆற்றில் விழுந்துள்ளான். அவனது உடல் இன்று(நவ.10) காலை சுமார் 9:00 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டு பிறகு பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


