News August 4, 2025

தி.மலை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக (ஆகஸ்ட்.4) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

Similar News

News August 5, 2025

தி.மலை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 627 மனுக்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் (ஆகஸ்டு.04) திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி 627 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

News August 5, 2025

தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி கிராம சேவை மைய கட்டிடத்தில், நாளை ஆகஸ்ட்-5, செவ்வாய்க்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. அஸ்வநாகசுரணை, பீமானந்தல் (ம) சின்னகோளாப்பாடி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு அரசின் 15 துறைகளின் 45 விதமான சேவைகள் வழங்கிட பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது.

News August 4, 2025

தி.மலை: நோய்களை தீர்க்கும் அற்புத தளம்

image

தி.மலை மாவட்டம் ஆரணி அருகே இஞ்சமேட்டில், இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும், இந்த கோயிலில் அருள்தரும் சிவபெருமானை செவ்வாய்க்கிழமைகளில் தரிசித்து, கோயிலில் தரும் தீர்த்தத்தை அருந்தினால் பலவகை நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் குழந்தை வரம் தரும் அற்புத தளமாகவும் இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!