News February 26, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (பிப்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 26, 2026
தி.மலையில் துடிதுடித்து பலி!

ஆரணியை அடுத்த கல்லூரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி(58). கட்டட மேஸ்திரியான இவர், சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர், படுகாயமடைந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 26, 2026
அரணியில் தூக்கில் தொங்கிய பெண்!

ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 34). இவரது கணவர் மகேஷ்குமார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் இருந்த கவிதா நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். * தற்கொலை எதற்கும் தீர்வல்ல*.
News February 26, 2026
ஆரணியில் சரித்திர ரவுடி அராஜகம்

தி.மலை: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதி பர்மா பாண்டி, பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். ஆரணி பஜாரில் போலீசார் உணவு வாங்க வாகனத்தை நிறுத்தியபோது, கைதி வேன் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கைதி தப்ப முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.


