News February 18, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 19, 2026
தி.மலை: பக்கோடா சாப்பிட சென்றவருக்கு அடி உதை!

செய்யாறு பகுதியை சேர்ந்தவர் தீனா (24). இவர் கடந்த 15-ந்தேதி பாராசூர் கூட்ரோட்டில் உள்ள கடைக்கு சிக்கன் பக்கோடா சாப்பிட சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கீழ்மட்டை கிரா மத்தை சேர்ந்த அருண்குமார் (23), சந்துரு (23) ஆகிய இருவரும் கடைக்காரர் ரேணு என்பவரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்கள். இதை தீனா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தீனாவை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.
News February 19, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்!

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற 22-ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 120-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 7000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தவுள்ளன. 18 -35 வயதுடைய வேலை தேடுவோர் முகாமில் பங்கேற்கலாம் என தி.மலை ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 19, 2026
அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், இன்று (18.02.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


