News January 26, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (25.01.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
தி.மலையில் துடிதுடித்து பலி!

கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்த பாப்பாம்மாள்(86). இவர், அதிகாலை வீட்டின் அருகே உள்ள சாலையோரம் சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 10, 2026
தி.மலை: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

சேத்துப்பட்டு பேரூராட்சி அண்ணா தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன், (72). இவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு நகை கடையில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை புருஷோத்தமன், சைக்கிளில் சென்று கொண்டிருந்தார், அப்போது ஆரனியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த சுற்றுலா வேன், புருஷோத்தமன், சென்ற சைக்கிள் மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தி லேயே துடிதுடித்து பலியானார்.


