News October 21, 2025

தி.மலை ஆட்சியர் விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராபி பருவ சம்பா நெல் பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாக கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். ஓர் ஏக்கருக்கு ரூ.538 பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சிட்டா, ஆதார், வங்கி புத்தகம், சாகுபடி அடங்கல் ஆவணங்களுடன் பொதுசேவை மையங்கள், வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது வங்கிகளில் காப்பீடு செய்து கொள்ளலாம்.

Similar News

News October 21, 2025

தி.மலை: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 21, 2025

தி.மலை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 21, 2025

தி.மலை: காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

image

இன்று 21/10/2025 காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. மற்றும் இந்நிகழ்வில் அனைத்து ஆயுதப்ப டை காவலர்களும் கலந்து கொண்டனர். அதன் பின் அவர்களின் தியாகத்தை பற்றி பேசப்பட்டது.

error: Content is protected !!