News June 24, 2024
தி.மலை அருகே 6 பேர் கைது

தி.மலை மாவட்டம், ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ஆரணி தாலுகா மற்றும் சந்தவாசல் பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பையூர் கிராமம் சிவக்குமார் (35), ராமதாஸ் (35), வேண்டா (45), சாந்தி (53), வனிதா (49), படவேடு தயாளன் (40) ஆகியோரிடம் பதுக்கி வைத்திருந்த 80 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஆறு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News July 6, 2025
தி.மலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் ஸ்ரீ அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் வரும் ஜூலை 10, வியாழக்கிழமை காலை 2.26 மணிக்கு தொடங்கி ஜூலை 11, வெள்ளிக்கிழமை காலை 3.11 மணிக்கு முடிவடையும் என்று ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
News July 6, 2025
தி.மலை: உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும், ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு (04175 233 381) தொடர்பு கொள்ளுங்கள். *10th முடித்த நண்பர்களுக்கு பகிருங்கள்* <<16962477>>தொடர்ச்சி<<>>
News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க