News February 17, 2026
தி.மலை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

தி.மலை மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் போன்றவற்றை பெற நீங்க அரசு ஆபீஸுக்கு ஏறி, இறங்கி அலைய வேண்டாம். 50 வகையான அரசு சேவைகள் & சான்றிதழ்களை எங்கேயும் அலையாமல், 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, நீங்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
Similar News
News February 17, 2026
தி.மலை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 17, 2026
தி.மலை: உங்க வீட்டில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 17, 2026
மக்கள் குறைதீா் கூட்டங்களில் 948 மனுக்கள்!

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் நேற்று மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 793 மனுக்களை பெற்றார். மேலும், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 54 மனுக்களும், செய்யார் சார் ஆட்சியர் தலைமையில் 101 மனுக்களும் என, மொத்தம் 948 மனுக்கள் பெறப்பட்டது.


