News February 2, 2026

தி.மலை: “அண்ணா நா சாக போறேன்”- தம்பி!

image

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா இடையங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாபு ஷரீப் என்பவரின் மகன் உமர் (18). இவர் செய்யாறை சேர்ந்த நண்பர் பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது அண்ணன் முபாரக் அலி என்பவரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 11, 2026

தி.மலை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் இந்த <>இணையதளம் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News February 11, 2026

தி.மலை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்

News February 11, 2026

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று (பிப்.10) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார்.இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி பேசினார். இதில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!