News February 17, 2026
தி.மலையில் விஷம் குடித்து தற்கொலை!

ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி தமிழ்செல்வி(40). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், தமிழ்செல்வி கடந்த சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். கடந்த பிப்.14ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தவரை மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News February 19, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்!

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற 22-ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 120-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 7000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தவுள்ளன. 18 -35 வயதுடைய வேலை தேடுவோர் முகாமில் பங்கேற்கலாம் என தி.மலை ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 19, 2026
அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், இன்று (18.02.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News February 19, 2026
அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், இன்று (18.02.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


