News August 17, 2024

தி.மலையில் ரூ. 6 கோடிக்கு மது விற்பனை

image

தமிழகம் முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்தின நாளான ஆக 14 ஆம் தேதி அனைத்து கடைகளிலும் விற்பனை அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 206 டாஸ்மாக் கடைகளிலும் ஆக 14ஆம் தேதி ஒரே நாளில் ரூ. 6 கோடியே 63 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 16, 2025

தி.மலை: குழந்தை வரம் தரும் அற்புத தலம்

image

போளூர் அருகே இயற்கை எழில் சூழ்ந்த சம்பந்தகிரி மலைகளுக்கு அருகே அருணகிரிநாதரால் போற்றிப்பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. குறிப்பாக இத்தலத்தில் பத்து நாள் திருவிழாவாக நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவில் ஸ்ரீ பால முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தில் ஐதீகமாகவே உள்ளது. இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 16, 2025

தி.மலையில் மழை அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து 2 நாட்களாக அதிகமான வெயில் காணப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் இன்று மற்றும் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை அறிக்கை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தேவைகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News September 16, 2025

தி.மலை: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

தி.மலை மக்களே! மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200 மற்றும் TOLL FREE NO-1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!

error: Content is protected !!