News September 9, 2025

தி.மலையில் மக்கள் குறைதீா் கூட்டம்.

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் (செப்.08) நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 566 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம்
வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

Similar News

News September 9, 2025

தி.மலை: உள்ளூரில் அரசு வேலை

image

தி.மலை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் ஓட்டுநர், எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆரணி, சேத்துப்பட்டு, செய்யார், ஜவ்வாதுமலை, போளூர், தெள்ளார், தி.மலை, வந்தவாசி, வெம்பாக்கம், மேற்கு ஆரணி உள்ளிட்ட ஊராட்சிகளில் தகுதியுடையோர் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News September 9, 2025

BREAKING: தி.மலை வரும் விஜய்

image

நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலை நோக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார். விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் தவெகவின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த கையோடு, மாவட்ட வாரியாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். செப்.13 திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கும் விஜய் அக்.18ல் தி.மலையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தங்கள் பகுதிக்கு வரும் தலைவர் விஜயை காண தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

News September 9, 2025

தி.மலை: உள்ளூரில் அரசு வேலை

image

தி.மலை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில், ஆரணி, சேத்துப்பட்டு, செய்யார், ஜவ்வாதுமலை, போளூர், தெள்ளார், திருவண்ணாமலை, வந்தவாசி, வெம்பாக்கம் மேற்கு ஆரணி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், எழுத்தர், அலுவலக உதவியாளர், மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!