News December 14, 2025

தி.மலையில் மகா தீப தரிசனம் நிறைவு

image

திருவண்ணாமலையில் 11 நாட்கள் நடைபெற்ற மகாதீப தரிசனம் டிசம்பர் 14, 2025 (இன்று) நிறைவுபெற்றது. டிச.3 ஆம் தேதி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் அணைக்கப்பட்டதுடன், நாளை (டிசம்பர் 15) தீப கொப்பரை 2,668 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு அண்ணாமலையார் கோயிலுக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 14, 2025

உதயநிதியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

image

தி.மலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.“கொள்கை எதிரிகள் உதயநிதியை ‘Most Dangerous’ என கூறுகிறார்கள். அந்த அளவுக்கு அவர் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்” என பேசினார். 2026 தேர்தல் இலக்கை நோக்கி இளைஞர்கள் களப்பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் பேசினார்.

News December 14, 2025

தி.மலை: முதல்வருக்கு வெள்ளி சிம்மாசனம் பரிசு

image

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விழா இன்று (டிச.14) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மலை மாவட்ட இளைஞரணி சார்பில் வெள்ளி சிம்மாசனம் பரிசாக வழங்கப்பட்டது. உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News December 14, 2025

தி.மலை: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!