News February 22, 2026

தி.மலையில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். ஷேர்!

Similar News

News March 1, 2026

தி.மலை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

திமுக கோட்டையா தி.மலை?

image

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. அதேபோல் 2024 MP தேர்தலிலும், தி.மலையில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 2.33 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றார். இது இந்த மாவட்டத்தின் மீது திமுக கொண்டுள்ள பிடியைக் காட்டுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில் TVK, PMK திமுக கோட்டையில் விரிசலை ஏற்படுத்துமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News March 1, 2026

ஆரணியில் அதிரடி கைது

image

ஆரணி அருகே ஆரணி–வேலூர் சாலையில் ஜெயலட்சுமி(45) என்பவரிடம் 7 சவரன் தங்க நகையை டூவீலரில் வந்த இருவர் பறித்து சென்றனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (26), மதன் குமார் (30) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!