News February 6, 2026
தி.மலையில் நாளை பவர் கட்!

தி.மலை மாவட்டத்தில் நாளை(பிப்.7) காலை 9 – மாலை 4 வரை கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, மானாவரம், ராயம்பேட்டை, குன்னங்குப்பம், வேடநத்தம், நாரியமங்கலம், தள்ளாம்பாடி, கடம்பை, ஆராஞ்சி, ஆரணி டவுன், சைதாப்பேட்டை, வி.ஏ.கே நகர், சத்தியமூர்த்தி சாலை ஆரணிப்பாளையம், அரியப்பாடி, கொசப்பாளையம், குன்னத்தூர், சேத்துப்பட்டு ரோடு, ஈ.பி நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை.
Similar News
News February 15, 2026
தி.மலை: சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

சிவராத்திரியை முன்னிட்டு சென்னை எழும்பூர் – திருவண்ணாமலை (06107) சிறப்பு ரயில் பிப்.15 காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 3.00 மணிக்கு சென்று சேரும். திரும்பும் 06108 ரயில் பிப்.16 அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்டு காலை 9.15 மணிக்கு எழும்பூரை அடையும். 2 ஏசி, 8 இரண்டாம் வகுப்பு, 4 பொதுப் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
News February 15, 2026
தி.மலை கோயிலில் கொள்ளையடிக்கும் கும்பல்!

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், கிரிவலப் பாதையில் சிலரை குறி வைக்கும் ஒரு சிலர், பொட்டு வைப்பதாகக் கூறி கட்டாய பணம் வசூல் செய்கின்றனர். பணம் தர மறுக்கும் பக்தர்களிடம் ஒருமையில் பேசுவதாக புகார் எழுகிறது. ஆகையால், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News February 15, 2026
ஆரணியில் அதிரடி கைது!

தி.மலை: ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார், பாட்டைகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆஸ்கா என்கிற பூங்காவனம்(67) என்ற பெண் சட்டவிரோத விற்பனைக்கு வைத்திருந்த 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


