News August 13, 2025
தி.மலையில் கள ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் திருவண்ணாமலை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக.13) கள ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று செயல்பட்டுவரும் பல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News August 13, 2025
திருவண்ணாமலை அரசு பள்ளி ஆசிரியருக்கு டெல்லியில் விருது

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி
பட்டதாரி தமிழ் ஆசிரியர் இரா.முத்து கம்பன் அவர்கள், சர்வதேச அளவிலான Global Best Teacher Role Model Award விருதைப் பெறுகிறார். வரும் 24.08.2025 அன்று, புது டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இவர், மாநில அளவில் தமிழக அரசின் Dr. ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
News August 13, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று(ஆக.13) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சிறப்பு மானியம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 132 விவசாயிகளிடமிருந்து 10,712.387 டன் கரும்பு பெறப்பட உள்ளது. அகல பார் அமைத்து பருசீவல் நாற்று, ஒரு பருக்கரணை நடவு உள்ளிட்ட முறைகளுக்கு மாநில அரசு மற்றும் மத்திய திட்டங்கள் மூலம் ஹெக்டருக்கு ரூ.3,000 – ரூ.18,625 வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.