News September 22, 2025
தி.மலைக்கு மழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் இன்று (செப்.,22) மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை குறித்த புகார்களுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்! கொஞ்சம் அலெர்ட்டாக இருங்க மக்களே!
Similar News
News September 22, 2025
தி.மலை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் தெரிவித்துள்ளது. இதனால் 10 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 22, 2025
தி.மலை: பூட்டிய வீட்டில் 65 பவுன் நகை கொள்ளை!

தி.மலை, பொன்னுார் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு (65) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவரது மனைவி நிர்மல்குமாரி. இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னையிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தனர். அப்பாவு, சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது பீரோவை உடைத்து 65 சவரன் நகை, திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து பொன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 22, 2025
நான் ஒரிஜினல் விவசாயி – அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் நேற்று (செப்.,21) தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் பழனிசாமி, செயலாளர் இரா. சுப்பிரமணி, துணைத் தலைவர் அ.எ.கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் அமைச்சர் எ.வ.வேலு அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி வாழ்த்துரை வழங்கினார். இதில், பேசிய அமைச்சர் எ.வ.வேலு தான் ஒரிஜினல் விவசாயி என கூறினார்.