News November 16, 2024
திறப்பு அருவியில் 8வது நாளாக குளிக்க தடை

பேச்சிப்பாறை, சிற்றார் அணையில் இருந்து 8வது நாளாக இன்றும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் இன்றும் குளிக்க தடை நீடிக்கிறது. தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை காணப்படுகிறது. மேலும் திற்பரப்பு அணைக்கட்டு நிரம்பி வழிவதால் படகு சவாரியும் நடக்கவில்லை.
Similar News
News August 8, 2025
குமரி: ரேஷன் கார்டில் பிரச்சனையா?..குட் நியூஸ்!

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நாளை (ஆக.9) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற ஏராளமான ரேஷன் சிறப்பு சேவைகள் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துளார். இந்த நல்ல தகவலை ரேஷன் கார்டு வைத்திருக்கும் உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 8, 2025
கைத்தறி ஆடைகள் வாங்கிய எம்.எல்.ஏ

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நேற்று (ஆக.7) நாகர்கோவில் மேற்கு மாநகர் பாஜக சார்பாக 17-வது வார்டு நெசவாளர்க் காலனி பகுதியில் கைத்தறி நெசவாளர்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சந்தித்து கைத்தறி ஆடைகளை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் மேற்கு மாநகர் தலைவர் சதீஷ் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News August 7, 2025
குமரி மாவட்ட இரவு ரோந்து பணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஆக.07) இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்காக ரோந்து பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காவல் நிலைய வாரியாக SSI மற்றும் HC அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் முழு விவரங்கள் தரப்பட்டுள்ளன.