News June 7, 2024
திருவையாறில் அதிகபட்ச மழை பதிவு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் 19 மி.மீ, வல்லம் 20 மி.மீ, குருங்குளம் 16.30 மி.மீ, திருக்காட்டுப்பள்ளி 40 மி.மீ, பாபநாசம் 25 மி.மீ, கும்பகோணம் 13.20 மிமீ, நெய்வாசலில் 11.80 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக திருவையாறில் 45 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 288.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Similar News
News September 14, 2025
தஞ்சை: உங்க வழக்குகளின் நிலை தெரிஞ்சுக்கனுமா?

தஞ்சை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News September 14, 2025
தஞ்சை: 16.09.2025 தேதியை குறித்து வச்சிக்கோங்க!

தஞ்சை மாவட்டத்தில் 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து தற்போது காணலாம்!
⏩தஞ்சாவூர்: அண்ணா நூற்றாண்டு மண்டபம்,
⏩பட்டுக்கோட்டை KKT சுமங்கலி மஹால்,
⏩ஆடுதுறை,வீரசோழன் கோ.சி.மணி திருமண மண்டபம்.
⏩திருவோணம் ஊராட்சி மன்ற அலுவலகம், பொய்யுண்டார்குடிகாடு
⏩கும்பகோணம் சோழன் மஹால், அண்ணலக்ரஹாரம்
⏩நாஞ்சிக்கோட்டை மாதாகோட்டை மக்கள் மன்றம்
SHARE பண்ணுங்க!
News September 14, 2025
கும்பகோணம்: அதிமுக கிளைக் அவைத்தலைவர் படுகொலை

கும்பகோணம் அருகே மாத்தூர் ஊராட்சியில் பெட்ரோல் பங்க் மற்றும் வட்டி தொழில், ரியல் எஸ்டேட் செய்யும் மாத்தூரில் அதிமுக கிளை கழக அவைத்தலைவர் கனகராஜ் (70) நேற்று இரவு அவரது இல்லத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாச்சியார்கோயில் போலீசார் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு அனுப்பினர்.