News January 7, 2026

திருவெறும்பூர்: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது தோழிகளுடன் விளையாடி கொண்டு இருந்த பொழுது அங்கு வந்த பரணிகுமார் (54) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து பரணிக்குமாரை  போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Similar News

News February 9, 2026

திருச்சி: 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் !

image

நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்த திருச்சி மாநகர போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது வசந்தகுமார் தன் உடலில் கஞ்சாவை மறைத்து வைத்து, அதனை மீண்டும் சிறைக்குள் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கைதி காவலில் அலட்சியமாக செயல்பட்ட போலீசார் 4 பேரை திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

News February 9, 2026

திருச்சி: தீப்பிடித்து வீடு எரிந்து நாசம்

image

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் முத்துராஜா தெருவில் வசித்து வரும் கிருஷ்ணவேணி (70) என்ற மூதாட்டி அடுப்படியில் வைத்த எண்ணெய் பாக்கெட் வெப்பத்தால் தீப்பிடித்தது. அவர் அணைக்க முயன்று தண்ணீரை ஊற்றியதால் தீ கூரைக்கு பரவி வீடு எரிந்தது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். மூதாட்டி காயமின்றி தப்பினார். இதில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 9, 2026

திருச்சி: தீயில் எரிந்து நாசமாகிய பேருந்து

image

சமயபுரம் அருகே அகிலாண்டபுரத்தில் தனியார் ஒர்க் ஷாப் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பேருந்து மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகி எலும்புக்கூடாக காட்சியளித்தது.

error: Content is protected !!