News February 25, 2025
திருவெறும்பூர்: காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலைய வருகை பதிவேடு கோப்புகள், குற்ற பதிவேடு கோப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். மேலும் காவலர்கள் பணி குறித்து கேட்டறிந்து குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர பணி குறித்து ஆலோசனை வழங்கினார்.
Similar News
News March 9, 2026
‘நாங்கள் மட்டுமே ஆள்வோம்’: திருச்சியில் CM அதிரடி பேச்சு!

‘தமிழ்நாட்டை அதிமுக முகமூடி அணிந்து காவி கும்பல் கைப்பற்ற நினைக்கிறது. ஆனால் இந்த கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை அது நடக்காது. தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்காது. எப்பொழுதும் மக்களுக்காக களத்தில் நிற்கும் கட்சி திமுக. எங்கள் மண்ணை நாங்கள் மட்டும் தான் ஆள்வோம். தமிழ்நாடு எப்போதும் பாஜகவுக்கு ‘Out of Control’ தான்’ என்றார் அவர்.
News March 9, 2026
‘திருச்சி என்றாலே வெற்றி’: CM ஸ்டாலின் புகழாரம்

சிறுகனூரர் திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘திருச்சி தமிழகத்தின் மைய பகுதி மட்டும் அல்ல, இது கழகத்தின் மாநாட்டு பகுதி. திமுகவின் 12 மாநில மாநாடுகளில், மொத்தம் 7 மாநாடுகள் திருச்சியில் தான் நடந்துள்ளது. 1956 திருச்சி மாநாட்டில் தான் கழகம் தேர்தலில் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது. திருச்சி என்றாலே திருப்பம், திருச்சி என்றாலே எழுச்சி, திருச்சி என்றாலே மகத்தான வெற்றி’ என்றார் அவர்.
News March 9, 2026
‘திருச்சி என்றாலே வெற்றி’: CM ஸ்டாலின் புகழாரம்

சிறுகனூரர் திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘திருச்சி தமிழகத்தின் மைய பகுதி மட்டும் அல்ல, இது கழகத்தின் மாநாட்டு பகுதி. திமுகவின் 12 மாநில மாநாடுகளில், மொத்தம் 7 மாநாடுகள் திருச்சியில் தான் நடந்துள்ளது. 1956 திருச்சி மாநாட்டில் தான் கழகம் தேர்தலில் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது. திருச்சி என்றாலே திருப்பம், திருச்சி என்றாலே எழுச்சி, திருச்சி என்றாலே மகத்தான வெற்றி’ என்றார் அவர்.


