News October 19, 2025

திருவாரூர்: 777 போலீசார் பாதுகாப்பு!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 டிஎஸ்பி-க்கள், 27 இன்ஸ்பெக்டர்கள், 81 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 659 போலீசார் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 777 போலீசார், எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திருவாரூர் எஸ்.பி கருண் கரட் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 21, 2025

திருவாரூர் தியாகராஜர் கோயில் மழை வெள்ளம்!

image

திருவாரூர் மாவட்டத்தில் அக்.19 காலை 10 மணியளவில் தொடங்கி 2 மணி நேரம் பலத்த மழை வெளுத்து வாங்கியது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால், வாகன ஒட்டிகள் சற்று சிரமப்பட்டனர். மேலும், பலத்த மழையினால் திருவாரூர் தியாகராஜர் கோயில் கிழக்கு கோபுர வாசல் 2வது பிரகாரம் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

News October 21, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News October 20, 2025

திருவாரூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!