News August 13, 2025
திருவாரூர்: 430 ஊராட்சிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும், சுதந்திரதின கிராம சபைக் கூட்டங்கள் வரும் 15-ந் தேதி நடக்கிறது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!
News August 13, 2025
திருவாரூர்: ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ம் தேதிக்குள்<
News August 13, 2025
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

வலங்கைமான் தாலுக்கா ஆலங்குடி அருகே உள்ள பூனாயிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இன்று காலை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் ரவா கிச்சடி சாப்பிட்டபோது அதில் பல்லி கிடந்தது தெரியாமல் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், 8 மாணவர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.