News April 25, 2024
திருவாரூர்: 4 பேர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது

முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. இவரை முன்விரோதம் காரணமாக விளாங்காடு கிராமத்தை சேர்ந்த அபிஷ், பிரதிப், ஆதி, இடும்பாவனம் பாலசுந்தரம், ஆகிய 4 பேர் சேர்ந்து தாக்கி ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றார்.
Similar News
News September 4, 2025
திருவாரூர் மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

திருவாரூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க <
News September 4, 2025
திருவாரூர்: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News September 4, 2025
திருவாரூர்: நுகர் பொருள் வாணிப கழகத்தில் தவெகவினர் மனு

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயம் செய்யும் நெல்களை கொள்முதல் நிலையத்தில் வைப்பதற்காக கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி மாவட்ட நுகர்பொருள் வாணிப அலுவலகத்தில்நேற்று (செப்டம்பர் 3) திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட தலைவர் மதன் மற்றும் திருவாரூர் மாவட்ட தவெகவினர் உடன் இருந்தனர்.