News December 14, 2025

திருவாரூர்: 1297 வழக்குகளுக்கு தீர்வு

image

திருவாரூர் மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி செல்வமுத்துக்குமாரி தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 3,102 வழக்குகள் எடுக்கப்பட்டு 1,297 வழக்குகளில் ரூ 3 கோடியே 78 லட்சத்து 55 ஆயிரத்து 648 மதிப்பிற்கு சமரச தீர்வு ஏற்பட்டது. இதில் நீதிபதிகள் சரத்ராஜ், லதா, முருகன், மாணிக்கம் முகமதுபசில், லிஷி ஆகியோர் கலந்து கொண்டனர்

Similar News

News December 18, 2025

திருவாரூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

திருவாரூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

News December 18, 2025

திருவாரூர் மாவட்ட அதிகார மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள 2 கணினி இயக்குபவர்கள் பணியிடத்திற்கு தற்காலிகமாக மாதம் ரூ.20,000 ஒப்பந்த அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் 5.01.2026-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 18, 2025

திருவாரூர்: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை

image

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <>{CLICK HERE}<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!