News December 27, 2025

திருவாரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News January 8, 2026

திருவாரூர்: சலூன் கடைக்காரர் போக்சோவில் கைது

image

குடவாசல் அருகே சுரைக்காயூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு 7 வயது சிறுவன் ஒருவன் முடி வெட்ட சென்றுள்ளான். அப்போது சலூன் கடைக்காரரான விஜய் அந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுவன் தனது தாயாரிடம் கூறியதையடுத்து, போலீசாரிடம் புகார் கொடுத்ததன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் விஜய்யை கைது செய்தனர்.

News January 7, 2026

திருவாரூர்: தீரா நோய்களை தீர்க்கும் கோயில்

image

வலங்கைமான் வட்டம், நரிக்குடியில் எமனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் எமதர்ம ராஜாவுக்கென அமைந்துள்ள சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலில் அமைந்துள்ள ஊற்றில் சுரக்கும் நீரைப் பருகினால் தீராத நோய்களும் உடனடியாக குணமாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் பிதுர்தோஷம் நீங்க, துர்மரணம் ஏற்படாமல் இருக்கவும் பக்தர்கள் இத்தலத்தில் உள்ள எமனை தரிசிக்கின்றனர். SHARE NOW

News January 7, 2026

திருவாரூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருவாரூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

error: Content is protected !!