News February 1, 2026

திருவாரூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.

Similar News

News February 5, 2026

திருவாரூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் செய்து<<>> ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

திருவாரூர்: கழுத்தை அறுத்து மாணவர் தற்கொலை முயற்சி

image

திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தேவங்குடி பகுதியை சேர்ந்த நிஷாந்த் (19) என்பவர் படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் விடுதி குளியல் அறையில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே சக மாணவர்கள் அவரை மீட்டு திருவாரூர் GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 5, 2026

திருவாரூர்: இளைஞர் உயிரை காவு வாங்கிய தெருநாய்

image

நன்னிலம் அடுத்த முடிகொண்டானைச் சேர்ந்தவர் ஆகாஷ் (22). கடந்த 3 மாதங்களுக்கு முன் தெருநாய் ஒன்று இவரை கடித்துள்ளது. அவர் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் ஊசி போட்டு விட்டு, முறையான சிகிச்சை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகாஷ் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததால், மருத்துவ பரிசோதனை செய்த போது ரேபிஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!