News August 10, 2025
திருவாரூர்: ரூ.68,400 சம்பளத்தில் அரசு வேலை-APPLY NOW!

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <
Similar News
News August 10, 2025
அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட ரிசியூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை தமிழ்நாடு தொழில் முதலீடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று திறந்து வைத்து; குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 10, 2025
மன்னார்குடி பேருந்து நிலைய கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் பழைய பேருந்து நிலையத்தை இடித்து பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து கட்டப்பட்டு உள்ளது அந்த பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு இருக்கும் கடைகள் ஆக. 20,28 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கடைகளில் ஏலம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அறிவிப்பு.
News August 10, 2025
திருவாரூர் மாவட்டத்தில் 4,506 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள், கடத்துபவர்கள், அச்செயலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, மது, புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4,506 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி கருண் கரட் தெரிவித்துள்ளார்.