News December 13, 2025
திருவாரூர்: ரயில் எண்கள் மாற்றம்

ஜனவரி 1 முதல் பயணிகள் ரயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் எண்களில் இயங்கும் திருவாரூர்- காரைக்குடி ரயில் பழைய எண் 06197 புதிய எண் 56827, காரைக்குடி – திருவாரூர் ரயில் பழைய எண் 06198 புதிய எண் 56828, திருவாரூர் -பட்டுக்கோட்டை ரயில் பழைய எண் 06851 புதிய எண் 76831, பட்டுக்கோட்டை – திருவாரூர் பழைய எண் 06852 புதிய எண் 76832 என்ற நிரந்தர எண்களின் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
திருவாரூர்: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
திருவாரூர்: பெற்றோர் திட்டியதால் இளைஞர் தற்கொலை

கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூரைச் சேர்ந்தவர் அஜித் (21). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததனால் மன வேதனை அடைந்த அஜித் சம்பவத்தன்று விஷம் குடித்து கண்கொடுத்தவனிதம் பாலம் அருகே மயங்கி கிடந்துள்ளார். இதனை அந்த அஜித்தின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
News December 15, 2025
திருவாரூர்: மனைவியை கொல்ல முயன்ற கணவர்!

குடவாசல் கண்டியூரைச் சேர்ந்த ஆதித்யன்(28), பிரேமா(24) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் சமீபத்தில் ஆதித்யன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதை அடுத்து, ஏற்பட்ட தகராறில் ஆதித்யன் டீசலை ஊற்றி பிரேமாவை கொளுத்தி கொல்ல முயன்றுள்ளார். இதில் காயமடைந்த பிரேமாவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து குத்தாலம் போலீசார் பிரேமாவின் புகாரின் அடிப்படையில் ஆதித்யனை கைது செய்தனர்.


