News August 8, 2025

திருவாரூர்: மூடப்படாமல் இருக்கும் ஜீவசமாதி?

image

தட்சிணாமூர்த்தி சுவாமிகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்து விட்டு இறுதிக் காலத்தில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து 1835ஆம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தார். இதில் வியப்பானது என்னவென்றால் இவரின் சமாதி இன்னும் மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது. இவரது ஜீவசமாதி மேலே ஒரு சிவலிங்கம் நிறுவப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதனை தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News September 18, 2025

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை (செப்.18) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்து தீர்வு காணலாம் என திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News September 17, 2025

திருவாரூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <>myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid <<>>என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 17, 2025

திருவாரூரில் கல்வி கடன் முகாம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சிஸ் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 383 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4 கோடியே 99 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!