News October 9, 2024

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி 37 மனுக்களை அளித்தனர். அதனை நேரடியாக பெற்று அவர்களது குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பி உத்தரவிட்டார்.

Similar News

News December 10, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (டிச.10) இரவு 10 மணி முதல் நாளை (டிச.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 10, 2025

திருவாரூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

திருவாரூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News December 10, 2025

திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு!

image

திருவாரூரில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!