News April 4, 2025

திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு…

image

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மே.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE NOW

Similar News

News April 10, 2025

திருவாரூர்: தெரிந்து வைத்திருக்க வேண்டிய உதவி எண்கள் (பாகம்-2)

image

திருவாரூர் மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அரசு உதவி எண்கள் (பாகம்-2). மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04366 – 221003, மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, விபத்து அவசர வாகன உதவி – 102, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091, பேரிடர் கால உதவி – 1077, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04366-220510. இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <>அதிகாரப்பூர்வ இணையத்தில் <<>>ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து, உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

News April 10, 2025

கோட்டூர் அருகே மின்னல் தாக்கியதில் வீடு எரிந்து சேதம்

image

திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் நேற்று இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதில் சேந்தமங்கலம் மேலத்தெரு ஊராட்சியில் முருகானந்தம் என்பவருடைய கூரை வீட்டில் மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. மேலும் வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளியான பிரகதீஷ் என்பவருக்கும் முழங்கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!