News February 1, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கான குடிமைப் பொருட்கள் கொடுப்பதற்கான திட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் பிப்.2, 3 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ஆட்சியரகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
திருவாரூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

திருவாரூர் மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!
News February 8, 2026
திருவாரூரில் 3 பேர் கைது!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று பேரளம் காவல் நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சாராயம், மது பாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டு தெரிவித்தார்.
News February 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


